கடலூர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வரும் காவலர்கள் பணி மூப்பு அடிப்படையில் பணியிட மாற்றம் குறித்து நடைபெற்ற கவுன்சிலிங் ஜெயக்குமார். ஐ.பி.எஸ் பங்கேற்பு!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வரும்காவலர்கள் பணிமூப்பு அடிப்படையில் தாலுக்கா காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் வழங்குவது சம்பந்தமாக இன்று 24.5.2025 தேதி ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் தலைமையில்
பணி மாறுதல் குழுவினர் முன்னிலையில் ஒவ்வொரு காவலர்களிடமும் பணிபுரிய விரும்பும் காவல் நிலையங்களை கேட்டு அறிந்து கவுன்சிலிங் முறையில் 53 ஆயுதப்படை காவலர்களை தாலுக்கா காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆணை பிறப்பித்தார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர்.N. கோடீஸ்வரன், ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர். அபண்டைராஜ், ஆய்வாளர்கள். குருமூர்த்தி, அருட்செல்வன் மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அலுவலர். சிவக்குமார், பிரிவு கண்காணிப்பாளர். ஜான்சன் சகாயராஜா ஆகியோர் உடன் இருந்தனர்
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக