பண்ருட்டியில் முன்னாள் நகர மன்ற தலைவர் பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுக- வில் இணைந்த திமுக, விசிக, அமமுக கட்சியினர்!


கடலூர் வடக்கு மாவட்டம், பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள பல்வேறு கட்சிகளில் இருந்து  விலகி அதிமுகவில் இணைந்தனர்  இதில் திமுக,விசிக, அமமுக,உள்ளிட்ட  கட்சிகளைச் சேர்ந்த இளைஞர்கள் 200க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று  முன்னாள் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் நகர மன்ற தலைவருமான. பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் கழகத்தில் இணைந்த அனைவருக்கும் கழக சால்வை அணிவித்து முன்னாள் நகரமன்ற தலைவர் பன்னீர்செல்வம் அனைவரையும் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். மேலும் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார்  முதலமைச்சராகுவதற்கு பண்ருட்டி சட்டமன்ற தொகுதி வெற்றி பெற  கழக பணியாற்றுவோம் என அனைவரும் உறுதி எடுத்துக் கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!