கரூர்- வெங்கக்கல்பட்டி ஆரம்ப பள்ளியில் மராமத்து பணி மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி!
கரூர் மாவட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000/- வழங்கிடும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் மாநகராட்சி வார்டு எண் 48, வெங்கக்கல்பட்டி பள்ளிப் பகுதியில், வெங்கக்கல்பட்டி ஆரம்பப் பள்ளியில் மராமத்து பணியை, ஒரு இடத்தில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணியை, 9 இடங்களில் தார் சாலைகளை மேம்படுத்தும் பணியை முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளரும், கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான. செந்தில் பாலாஜி அவர்கள் துவக்கி வைத்தார் .
இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் இ.ஆ.ப., மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்



கருத்துகள்
கருத்துரையிடுக