கடலூர் - கோவில் திருவிழாவில் பாட்டு கச்சேரி நிகழ்ச்சியில் போதைப்பொருள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட உதவி ஆய்வாளர்‌. பிரசன்னா!


கடலூர் மாவட்டம் புதுநகர் காவல் சரகம் உண்ணாமலை செட்டி சாவடி கோவில் திருவிழா பாட்டு கச்சேரி நிகழ்வில்போது இளைஞர்களின் உடலுக்கு கேடு விளைவிக்கும் கஞ்சா, ஹான்ஸ், குட்கா  போன்ற போதை பொருட்களை பயன்படுத்த கூடாது என கடலூர் புதுநகர் காவல் உதவி ஆய்வாளர் திரு. பிரசன்னா அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  மேலும் போதைப் பொருட்கள்  விற்பனை நடைபெற்றல் ரகசியமாக  தகவல்கள் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  எனவும், மாணவர்கள் நல்ல முறையில் படித்து   தமிழக அரசின் போட்டி தேர்வுகளான டிஎன்பிஎஸ்சி, காவலர் தேர்வுகள் கலந்து கொண்டு வெற்றி பெற்று  அரசாங்க வேலைக்கு சென்று சமுதாயத்திற்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் என அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!