கடலூர் அருகே வாகன தணிக்கையில் பிடிபட்ட புதுவை மாநில மதுபானங்கள் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . S. ஜெயக்குமார் IPS அவர்களின் உத்திரவின்பேரில் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர். G. பார்த்திபன் அவர்களின் மேற்பார்வையில் கடலூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் . K. பாலாஜி அவர்களின் தலைமையில் தலைமை காவலர்கள். நவமணி, மணிகண்டன் ஆகியோர்கள் கும்தாமேடு சோதனைசாவடியில் போதை பொருட்கள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது TN31CF 7159 என்ற Hero splendor plus என்ற இருசக்கர வாகனத்தில் வந்த நாராயணசாமி வயது 26, த/பெ நடராஜன், 3,தெற்கு தெரு, மணக்குப்பம் என்பவரை நிறுத்தி சோதனை செய்ததில் அவரது வண்டியில் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த புதுவை மாநில Super Select Brandy 90ml - 100 பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு கடலூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக