பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: இராணிப்பேட்டையில் ஆர். வினோத் காந்தி தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
இராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நகர திமுக சார்பில் கழக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் ஆர்.வினோத்காந்தி அவர்கள் தலைமையில் பொள்ளாச்சியில் பாலியல் சம்பவத்தில் 9 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கி சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர்
நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து இராணிப்பேட்டைநகர கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள் ஆகியோருடன் ஆர். வினோத் காந்தி பட்டாசு வெடித்து கொண்டாடினார்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார்



கருத்துகள்
கருத்துரையிடுக