இராஜபாளையம் அருகே கலங்காபேரி ஊராட்சியில் பேவர் பிளாக் தளம் பதிக்கும் பணிக்கு பூமி பூஜை தங்கப்பாண்டியன் எம்எல்ஏ தொடங்கி வைப்பு!
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தொகுதியில் இன்று (14.05.2025) காலை இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு (2025-26) நிதியிலிருந்து 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கலங்காபேரி ஊராட்சி யாதவர் தெரு
தொட்டியபட்டி கிராமத்தில் மெயின் தெரு மற்றும் கொத்தங்குளம் ஊராட்சி கிழக்கு தெருக்களில் பேவர் பிளாக் தளம் பதிக்கும் பணிக்கு பாளையத்து பாண்டியர் S.தங்கப்பாண்டியன் எம்எல்ஏ அவர்கள் தலைமையில் முன்னாள் சேர்மன் மல்லி கு.ஆறுமுகம் அவர்கள் ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் உஷா அவர்கள் முன்னிலையில் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ராஜ்குமார் முன்னாள் கவுன்சிலர் கணேசன் கழக கிளைச்செயலாளர்கள். அய்யகோன், ஜெனரத்தினன், கிருஷ்ணன், ரவிக்குமார், மீனா, ராமர், கோவிந்தன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் ஊர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.





கருத்துகள்
கருத்துரையிடுக