கரூர் - ராயனூர் பகுதியில் தார் சாலையை மேம்படுத்தும் பணி, மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மற்றும் ஆரம்ப பள்ளி & நடுநிலைப்பள்ளிகளில் மராமத்து செய்யும் பணிகளை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி!
கரூர் மாவட்டம் தொழில்முனைவோர்களின் தோழர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் நல்லாசியுடன், இன்று, கரூர் மாநகராட்சி வார்டு எண் 45 & 46, ராயனூர் பகுதியில் பகுதியில், 3 இடங்களில் தார் சாலையை மேம்படுத்தும் பணி, 4 இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மற்றும் ராயனூர் ஆரம்ப பள்ளி & நடுநிலைப்பள்ளிகளில் மராமத்து செய்யும் பணிகளை முன்னாள் அமைச்சரும்,கரூர் மாவட்ட செயலாளரும் மற்றும் கொங்கு மண்டல பொறுப்பாளருமான. செந்தில் பாலாஜி அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் இ.ஆ.ப., மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்


கருத்துகள்
கருத்துரையிடுக