தமிழக வாழ்வுரிமை கட்சியின் மணி, குணா ஒருங்கிணைப்பில் நடைபெற்ற மாற்று கட்சியினர் இணையும் இணைப்பு விழா!
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கைகளாலும் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளாலும் ஈர்க்கப்பட்டு மணி, குணா ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இணைப்பு விழா நிகழ்வில் செங்கல்பட்டு தெற்கு மாவட்டம். திருப்போரூர்(கிழக்கு) சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தங்களை கட்சியில் இணைத்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் என்னோடு கட்சியின் முன்னணி நிர்வாகிகளான வேணுகோபால், ஜெகதீச பாண்டியன், புகழேந்தி மாறன் ஆகியோர் பங்கேற்றனர்.


கருத்துகள்
கருத்துரையிடுக