காஞ்சிபுரம் அருகே கோவிந்த வாடி ஊராட்சியில் நடைபெற்ற உயர்நிலைப்பள்ளி கட்டிட அடிக்கல் நாட்டு விழா! அமைச்சராக காந்தி பங்கேற்பு!!
காஞ்சிபுரம் மாவட்டம்,தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, வாலாஜாபாத் வடக்கு ஒன்றியம் கோவிந்தவாடி ஊராட்சியில் உயர்நிலைப்பள்ளி கட்டிட அடிக்கள் நாட்டு விழாவிற்கு வருகை தந்த கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் மாண்புமிகு ஆர்.காந்தி அவர்கள், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளரும்,
உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் MLA, நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக துணைச் செயலாளருமான. சிறுவேடல் க.செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினரும், கழக கொள்கை பரப்பு செயலாளருமான சிவிஎம்பி எழிலரசன MLA ஆகியோர்
கலந்து கொண்டு பள்ளி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினர். இதில் வாலாஜாபாத் பெருந்தலைவர். தேவேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மா.தொ.அ.து. அமைப்பாளர். ராஜலட்சுமிகுஜராஜ்,
வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய செயலாளர். படு நெல்லி பாபு மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்கள், ( து) அமைப்பாளர்கள், கிளைக் கழக செயலாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.









கருத்துகள்
கருத்துரையிடுக