இராஜபாளையம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தங்கபாண்டியன் எம்எல்ஏ பங்கேற்பு!
இராஜபாளையம் தொகுதியில் இன்று (14.05.2025) மாலை 6 மணியளவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, செட்டியார்பட்டி, ஆறு சமூகத்திற்கு பாத்தியப்பட்ட கலையரங்கத்தில் வைத்து இராஜபாளையம் மேற்கு ஒன்றிய தி.மு.க
சார்பில், நான்காண்டு சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் பாளையத்து பாண்டியர் S.தங்கப்பாண்டியன் எம்எல்ஏ அவர்கள் தலைமையில் தூத்துக்குடி ஜி.சரத்பாலா அவர்கள் சிறப்புரையில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைசெயலாளர் Ex.MLA வி.பி.ராசன்,, நகர செயலாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பேரூர் கழக செயலாளர் இளங்கோவன் பேரூராட்சி சேர்மன்கள் ஜெயமுருகன்,
பாலசுப்பிரமணியன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, மற்றும் ஒன்றிய, நகர, பேரூர்கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், நகர் பேரூர் மன்ற உறுப்பினர்கள், அனைத்து அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், கிளை கழக நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் இதில் கலந்து கலந்து கொண்டனர்.







கருத்துகள்
கருத்துரையிடுக