பண்ருட்டியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் முதலிடம் பிடித்த மாணவன் முகமது யாயிஸ் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்த நகர மன்ற தலைவர் க. ராஜேந்திரன்!
பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் 95சதவீதத்திற்கு மேல் எடுத்து சிறப்பிடம் பெற்றுள்ளது.பள்ளி அளவில் 473மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பிடித்தமாணவன் முகமது யாயிஸ் அவர்களை பள்ளி வளர்ச்சி குழு தலைவரும், பண்ருட்டி நகர மன்ற தலைவர். கே. ராஜேந்திரன் அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
உடன் தலைமை ஆசிரியர் க. ஆலமர் செல்வன் தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் ராஜா ஆ ஆசிரியர்கள் க. ரத்தின பிரகாஷ், அ. முத்துக்குமரன் , கே.குண செல்வம் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் V. லோகநாதன் பள்ளி வளர்ச்சி குழு துணை தலைவர் E. பழனி ஆகியோர் உடன் இருந்தனர் .
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக