கடலூர் அருகே கட்டி முடிக்கப்பட்டு திறக்காமல் இருக்கும் கிராம நிர்வாக அலுவலகம் மக்கள் பயன்பாட்டிற்கு வருமா பொதுமக்கள் கேள்வி!


கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட குதிதாங்கி மற்றும் மடிப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் சோழவல்லி கிராம நிர்வாக அலுவலகம் கட்டி முடித்து கடந்த மூன்று மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளன இந்த கட்டிடம் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டது தற்போது திறக்கப்படாமல் இருக்கும் இந்த அலுவலகத்தின் பணிகள் பாழடைந்து கட்டிடத்தில்  இயங்கி வருவதால் அங்கு வரும் பொது மக்களுக்கும் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கும் அங்கு இருக்கும் ஆவணங்களுக்கும் பாதுகாப்பாற்ற நிலை உள்ளன அதிகாரிகளின் அலட்சிய போக்கால் திறக்கப்படாமல் உள்ள இந்த அலுவலகங்கள் எப்போது திறக்கப்படும் என பொதுமக்கள் கோரிக்கை!

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!