திருநெல்வேலி அருகே காத்த நடப்பு கிராமத்தில் பெருந்தலைவர். காமராஜருக்கு ஒரு சிலை நிறுவ வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை ஏற்ற விஜய் வசந்தகுமார்!
திருநெல்வேலி மாவட்டம்,காத்தநடப்பு கிராமத்தில் பெருந்தலைவர். காமராஜருக்கு ஒரு சிலை நிறுவ வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று எனது தந்தை அமரர். வசந்த குமார் அவர்கள் சிலை அமைக்கும் பணிகளுக்கு தொடக்கம் குறித்தார். அவரது மறைவிற்கு பின் பல நல்ல உள்ளங்களின் ஒத்துழைப்போடு சிலை நிறுவப்பட்டு நேற்று அதனை திறந்து வைத்தேன்.
முன்னாள் மத்திய அமைச்சர். தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். ராமசுப்பு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள். SV கிருஷ்ணன், நாராயணன், சிலை அமைப்பு குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



கருத்துகள்
கருத்துரையிடுக