தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் பொது வாக்கெடுப்பு நடத்த சர்வதேச சமூகத்திடம் நீதி கோரும் வகையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நடைபெறும் இருசக்கர பேரணி!
செஞ்சி 2009 ஆம் ஆண்டு தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச சமூகத்திடம் நீதிகோரும் வகையிலும் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில்,மாநில நிர்வாகி. முருகானந்தம். அவர்களின் ஒருங்கிணைப்பில் இருசக்கர ஊர்தி பயணம் கன்னியாகுமரியிலிருந்து 15-05-2025 அன்று தொடங்கி 18-05-2025 ஆம் தேதி செஞ்சிக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நடைபெறும் முள்ளிவாய்க்கால்
நினைவேந்தல் தின பொதுக்கூட்ட திடலில் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டு இந்த ஊர்தி பரப்புரை பயணம் திட்டமிட்டபடி தெற்க்கு எல்லைப் போராளிகள் நினைவிடத்திலிருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் முன்னிலையில் துவங்கியது.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்



கருத்துகள்
கருத்துரையிடுக