விழுப்புரம் நகராட்சி திடலில் நடைபெற்ற மிஸ் திருநங்கை போட்டி முன்னாள் அமைச்சர் க. பொன்முடி பங்கேற்பு!
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சி திடலில் மிஸ் திருநங்கை போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் க. பொன்முடி தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி சாதனை படைத்த 22 திருநங்கைகளுக்கு பரிசு வழங்கி கௌரவித்தார். முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் சேர்மன் ஜனகராஜ், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்

கருத்துகள்
கருத்துரையிடுக