நெமிலியில் எடப்பாடியாரின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் ஸ்ரீ ஊஞ்சல் பொன்னியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு நெமிலி நகர செயலாளர் செல்வம் தலைமையில் அதிமுகவினர் ஸ்ரீ ஊஞ்சல் பொன்னியம்மன் கோவிலில் தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சி மலர்ந்திட, அவர் நீண்ட ஆயுளோடு தமிழகத்தையும் அதிமுகவையும் வழிநடத்திட வேண்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு செய்தனர். இதில் நெமிலி நகர பொருளாளர். நவநீதகிருஷ்ணன், மேலவை பிரதிநிதி. சத்யமூர்த்தி, என். விநாயகம், மாவட்ட பொறுப்பாளர்கள். சுகுமார், தினேஷ், நெமிலி நகர இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர். சுசில் மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர். 

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!