நெமிலி அருகே வேட்டாங்குளம் விவசாய நிலத்தில் மின்சாரம் பாய்ந்து 3 பசுக்கள் பரிதாப உயிரிழப்பு!



ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பேரூராட்சிக்குட்பட்ட  வேட்டாங்குளம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி முனுசாமி (60). இவர் நேற்று காலை வழக்கம் போல் அதே பகுதியில் உள்ள வயல்வெளியில் தனக்கு சொந்தமான 3 பசுக்களை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றுள்ளார். பின்னர் மாலை மீண்டும் வீடு திரும்பும்போது அங்குள்ள விவசாய பாசன. கால்வாயில் அறுந்து விழுந் திருந்த மின்கம்பியை மிதித் ததில் 3 பசுக்கள் மின்சாரம் தாக்கி வீசப்பட்டு அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த முனுசாமி இது குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் அதிகாரிகள் அங்கு வந்து மின்சாரத்தை துண்டித்தனர். 

மேலும் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி உத்தரவின் பேரில் நெமிலி சப் இன்ஸ்பெக்டர் லோகேஷ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்'சாரம் பாய்ந்து ஒரே நேரத்தில் 3 பசுக்கள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!