திராவிடமாடல் அரசின் ஐந்தாம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் 214 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிடமாடல் அரசு பொறுப்பேற்று நான்காண்டுகள் நிறைவடைந்து, ஐந்தாம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், 214 புதிய பேருந்துகளின் சேவையை 

மக்கள் பயன்பாட்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்து பேருந்துகளை பார்வையிட்டார்கள். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர். சேகர் பாபு, மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர். 

அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள். டி.ஆர். பாலு, ராஜா, தயாநிதி மாறன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்கள், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!