முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் செல்வி .வைஷ்ணவி தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்த தமிழக வெற்றி கழகத்தினர்!
கோவை மாவட்டம்,தமிழ்நாடு முன்னேறிட, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்று உணர்ந்து, கோவை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர். தொ.அ.ரவி மற்றும் கவுண்டம்பாளையம் பகுதி கழகச் செயலாளர். ஜே.எஸ்.சரத் விக்னேஷ் ஏற்பாட்டில், கோவை மாநகர் மாவட்ட
தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்த செல்வி.வைஷ்ணவி தலைமையில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் - இளம் பெண்கள் தங்களை முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக கழக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் முன்னிலையில் திமுக கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இதில் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கோவைமாவட்ட செய்தியாளர் சக்திவேல்.


கருத்துகள்
கருத்துரையிடுக