பண்ருட்டி அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோவில் திருக்கல்யாண மஹோற்ஸவம் நிகழ்ச்சி!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருக்கோவில் திருக்கல்யாண மஹோற்ஸவம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நகர மன்ற உறுப்பினர். கௌரி அன்பழகன், சண்முகவள்ளி பழனி, வார்டு செயலாளர் ராஜி, மோகன், இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் மற்றும் உபயதாரர்கள் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக