ராணிப்பேட்டையில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் 60 க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாலமுருகன், ஸ்ரீதர், ஆகியோர் தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 2003 க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்துருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய
திட்டத்தினை கைவிட்டு பழைய ஓய்வு திட்டத்தினை அமல்படுத்திட கோரியும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது உடனடியாக வழங்கிட கோரியும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த கோரியும் இதுபோன்று பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார்


கருத்துகள்
கருத்துரையிடுக