கனவுப் பனுவல் நூல் வெளியீட்டு விழா !

 


கடலூர் மாவட்டம்,பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் எழுதிய கனவு பனுவல் நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் திருக்க ஆலமர செல்வன் அவர்கள் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக கவிஞர் எழுத்தாளர் பல்லவி குமார் நல்லாசிரியர் கவிஞர் வெற்றிச்செல்வி சண்முகம் ஆசிரியர் செந்தில்பாலா நல்லாசிரியர் ரத்தின ஆறுமுகம் முன்னாள் உதவி தலைமை ஆசிரியர் திருமதி ஆர்.அமலி  தமிழ் செம்மல் கவிதை கவிதை கணேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் எழுதிய சிறுகதைகள் கவிதைகள் கட்டுரைகள் அடங்கிய கனவுப் பனுவல்  நூலை வெளியிட்டனர். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் வி லோகநாதன் பள்ளி வளர்ச்சி குழு துணை தலைவர் திரு பழனி ஆசிரியர்கள் திரு ராஜேந்திரன் திரு ராமதாஸ் ரத்ன பிரகாஷ் திரு.குணசெல்வன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் ராஜா ஆ மற்றும் பள்ளி சாரணா ஆசிரியர் திரு முத்துக்குமார் ஆய்வு செய்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!