தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற தலைமை காவலர் ராஜேஸ்வரி அவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்த ஜெயக்குமார் ஐபிஎஸ்!
கடலூர் மாவட்டம் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி தமிழ்நாடு, புதுடெல்லி மற்றும் மத்தியபிரதேஷ் ஆகிய மாநிலங்களில் தொடர்ச்சியாக நடைபெற்றது. இப்போட்டியில் நெய்வேலி நகர காவல் நிலைய தலைமை காவலர். ராஜேஸ்வரி அவர்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு, 10 மீட்டர் ரைபில் பிரிவு மற்றும் 300 கஜம் இன்சாஸ் ஆகிய பிரிவுகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் வெற்றி பெற்ற காவலரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக