கடலூரில் பணி ஓய்வுபெறும் காவலர்களுக்கு கவுரவ படுத்தி நற்சான்றிதழ் வழங்கல்!
கடலூர் மாவட்டம் காவல்துறையில் சிறப்புடன் பணியாற்றி நேற்று 30.4.2025 தேதி ஓய்வு பெறும் துணை காவல் கண்காணிப்பாளர். ராமதாஸ், காவல் அலுவலக நிர்வாக அலுவலர். கிறிஸ்து ஜெயராஜ், காவல் ஆய்வாளர்
தெய்வசிகாமணி, உதவி ஆய்வாளர்கள். பாஸ்கர், ரவிச்சந்திரன், ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள். ராதாகிருஷ்ணன், M.R. ரவிச்சந்திரன், G. ரவிச்சந்திரன் ஆகியோர்களை கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (சைபர் கிரைம்) திரு. V. ரகுபதி அவர்கள் ஓய்வு
பெறும் காவல் அதிகாரிகளுக்கு சால்வை அணிவித்தும், சான்றிதழ் வழங்கியும் கௌரவித்தார். காவல் துறையில் சிறப்பாக பணியாற்றி ஒய்வு பெறும் நீங்கள் உடல் நலனை நன்றாக பேணிகாத்து குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என வாழ்த்துரை வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்



கருத்துகள்
கருத்துரையிடுக