கடலூர் மாவட்ட செய்தி துளிகள்!
👉.தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று கடலூர் பாடலீஸ்வரர் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
👉.தென்னம்பாக்கத்தில் நடந்த சித்திரை திருவிழாவில் 108 நாதஸ்வர, தவில் வாத்தியங்களுடன் அழகுமுத்து ஐயனாருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
👉. கடலூர் மாவட்டத்தில் நீர் நிலைகளில் குளிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று காவல்துறை S.P அறிவுறுத்தல்.
👉.ஊ.மங்களம் காவல் துறை உதவி ஆய்வாளர் தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியின்போது என்.எல்.சி.க்கு சொந்தமான சாம்பலை அனுமதியின்றி லாரியில் ஏற்றிய 2 நபர்கள் கைது.
👉.திட்டக்குடி சார்பு நீதிமன்றத்தில் இளநிலை கட்டளை நிறைவேற்றுதல் பணி செய்து வரும் நபரை பெண்ணடத்தைச் சேர்ந்த நபர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததால் கைது.
👉.காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வடக்கு கொளக்குடியைச் பகுதியை சேர்ந்த 5 சிறுவர்கள், சிறுமிகள் வெள்ளியங்கால் ஓடையில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
👉.டாக்டர் அம்பேத்கரின் 135-வது பிறந்த நாளையொட்டி கடலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அம்பேத்கரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
👉.கடலூர் வீர ஆஞ்சநேய ஆலயத்தில் லட்சதீப விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
👉.கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு மற்றும் தனியார் பேருந்தும் முந்திச் செல்லும் போட்டியில் அரசு பேருந்து கண்ணாடி உடைந்தது இதனால் கடலூர் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு.
👉.கடலூர் மாநகராட்சி 24வது வார்டுக்கு உட்பட்ட கம்மியம்பேட்டையில் குப்பை கிடங்கை காலி செய்து ரூ.18 லட்சம் செலவில் ரேஷன் கடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
👉.நகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கலப்பதால் விருத்தாச்சலம் மணிமுக்தாறு மினி கூவமாக மாறிவரும் அவல நிலை.
👉.பெண்ணாடம் பேரூராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் இரவு நேர மின்தடையை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதனால் பரபரப்பு.
👉.கடலூரில் இருந்து சென்னை உள்ளிட்ட வழித்தடங்களில் 13 புதிய அரசு பேருந்துகள் இயக்கத்தை அமைச்சர் துவங்கி வைத்தார்.
என்றும் மக்கள் பணியில் நிலவன் தொலைக்காட்சி
கருத்துகள்
கருத்துரையிடுக