இராஜபாளையம் தொகுதிக்காக முதலமைச்சர் தனி செயலாளர் மற்றும் மின்துறை அமைச்சர் அவர்களிடம் ராஜபாளையம் எம்எல்ஏ தங்கப்பாண்டியன் கோரிக்கை!
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தொகுதி - சட்டமன்ற வளாகத்தில் நேற்று (03.04.2025) இராஜபாளையம் தொகுதியில் பொன்னகரம் பகுதியில் புதியதாக புறக்காவல் நிலையம் அமைக்கவும் கிருஷ்ணாபுரம் (OP) பகுதியில் புதிய காவல் நிலைய கட்டிட வளாகம் அமைக்கவும் மாண்புமிகு முதலமைச்சர் தனி செயலாளர் அவர்களிடமும், மீனாட்சிபுரம் ஊராட்சியை சேத்தூர் மின் நிலையத்தில் இருந்து பிரித்து, பெருமாள்பட்டி துணை மின் நிலையத்துடன் இணைக்கவும், கொல்லங்கொண்டான் சாலையில் புதியதாக துணை மின் நிலையம் அமைக்கவும் மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அவர்களிடமும், தளவாய்புரம் முதல் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் திருச்செந்தூர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல புதிய வழித்தடத்தில் பேருந்துகளை இயக்க மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் S.S.சிவசங்கர் அவர்களிடமும், MLA அவர்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினார். மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர் பெருமக்கள் மனைக்களை பரிசீலனை செய்து விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்கள்.

கருத்துகள்
கருத்துரையிடுக