சென்னை திரு.வி.க நகரில் தந்தை பெரியார் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா அமைச்சர். சேகர் பாபு பங்கேற்பு!
சென்னை கிழக்கு மாவட்டம், திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதி, 76வது வார்டில் தந்தை பெரியார் நகர்புர ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமான பணிக்கு (23.04.2025) அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர். சேகர் பாபு அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
அதனைத் தொடர்ந்து 76வது வார்டு மாமன்ற உறுப்பினர். தமிழ்ச்செல்வி சசிகுமார் அவர்களின் வார்டு மேம்பாட்டு நிதியிலிருந்து 76வது வார்டுக்கு உட்பட்ட செல்லப்பா தெருவில் புதியதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டிடத்தை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தோம். இந்த நிகழ்வில் மேயர். பிரியா, தாயகம் கவி எம்.எல்.ஏ, மாநகராட்சி உயர் அதிகாரிகள், மண்டலக்குழுத் தலைவர். சரிதா மகேஷ்குமார் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.


கருத்துகள்
கருத்துரையிடுக