கேஸ் விலை உயர்வை கண்டித்து பரங்கிப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய மக்கள் விரோத பிஜேபி அரசின் கேஸ் விலை உயர்வை கண்டித்து பரங்கிப்பேட்டை பொறுப்பாளர் ஹசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாநில குழு ரமேஷ் பாபு கண்டன உரையாற்றினார் ஒன்றிய செயலாளர் விஜி , கவுன்சிலர் ராஜேஸ்வரி வேல்முருகன் , மாவட்ட குழு அம்சாயால் , பாண்டியன் , சந்தான ராஜ் மகளிர் குழுவினர் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கேஸ் விலை ஏற்றத்திற்கு எதிராக கண்டன கோஷமிட்டனர் காவல்துறை துணை ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் வக்ப் திருத்த சட்டத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளது - அதனொரு பகுதியாக பரங்கிப்பேட்டையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக