கரூர் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி திமுக கழக இளைஞர் அணி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்!
கரூர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி திமுக கழக இளைஞர் அணி சார்பில், இந்தித் திணிப்பு, நிதிப் பகிர்வில் பாரபட்சம், மக்களவை தொகுதிகள் சீரமைப்பில் அநீதி இழைத்திடும் ஒன்றிய அரசை கண்டித்து, மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம், நேற்று மாலை கரூர் மாவட்டம் வெள்ளியணை கடைவீதி அருகே நடைபெற்றது.
கழக செய்தி தொடர்பு துணைச் செயலாளர். சூர்யா கிருஷ்ணமூர்த்தி அவர்களும், தலைமை கழக இளம் பேச்சாளர். தமதி அவர்களும் சிறப்புரையாற்ற நடைபெற்ற இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்


கருத்துகள்
கருத்துரையிடுக