கரூர் வாங்கல் தலைமை நீரேற்று நிலையத்தில் டிஜிட்டல் அளவு மானி தானியங்கி மற்றும் மின் பாகங்கள் வழங்கும் பணிகளை துவக்கி வைத்த அமைச்சர். செந்தில் பாலாஜி!
கரூர் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் நல்லாசிகளுடன், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 1 வாங்கல் தலைமை நீரேற்று நிலையத்தில், வாங்கப்பாளையம் நீருந்து நிலையத்தில் டிஜிட்டல் அளவு மானி தானியங்கி மின் தேக்கி பொருத்துதல், 5 HP வெற்றிட பம்பு செட் பொருத்துதல், 120 HP மின் மோட்டார் பம்பு பழுது பார்த்தல்,
ஆழ்துளை சுத்தப்படுத்தும் பணி, 110kv x 150 hp செங்குத்து மோட்டார் பம்பு செட் மற்றும் பிற மின் பாகங்கள் வழங்கும் பணிகளை மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர். செந்தில் பாலாஜி அவர்கள் துவக்கி வைத்தார். இதில் கரூர் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்


கருத்துகள்
கருத்துரையிடுக