கடலூர் மாவட்ட செய்தி துளிகள்!
நாள்:- .09.04.2025 (புதன்கிழமை)
👉.மீன்பிடி தடைக்காலம் இம்மாதம் 15-ம் தேதி முதல் 61 நாட்கள் மீன்கள் இன விருத்திக்காக மீன் பிடிக்க தடை மீறுவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை.
👉.கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் 14 உதவி-ஆய்வாளர்கள் மாவட்டத்திற்கு உள்ளையே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
👉.மத்திய அரசின் வக்பு திருத்த சட்ட மசோதாவை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் மஞ்சக்குப்பத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
👉.கடலூர், பண்ருட்டி, விருத்தாச்சலம், நெய்வேலி, சிதம்பரம் உட்பட 11 இடங்களில் சில்லறை பிரச்சினை தீர்வு காணும் வகையில் டிக்கெட் UPI முறையில் பெற ஏற்ப்பாடு.
👉.பண்ருட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை திருமணம் நடக்க இருந்த நிலையில் காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண் பயிற்சியாளர்.
👉.கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு.
👉.வேப்பூரில் உள்ள பாத்திர கடையின் சுவற்றில் துளையிட்டு சீர்வரிசை பொருட்கள் திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
👉.கடலூர் மாவட்டத்தில் முதல் கட்ட கண்டுபிடிப்பில் 26 குழந்தைகள் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
👉.விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் உண்டியல் காணிக்கை என்னும் பணி நேற்று நடைபெற்றது இதில் ரூ.11½ லட்சம் காணிக்கை வசூல்.
👉.தமிழ்நாடு, கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் இணைந்து கிரிக்கெட் வீரர்களுக்கான பயிற்சி முகாம் இம்மாதம் 21 ம் தேதி முதல் அடுத்த மாதம் 11-ம் தேதி வரை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.
என்றும் மக்கள் பணியில் நிலவன் தொலைக்காட்சி
கருத்துகள்
கருத்துரையிடுக