அமைச்சர். செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக-வினர்!
கோவை மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்று உணர்ந்து, கோவை வடக்கு மாவட்டம் பூலுவபட்டி பேரூர் கழக, பாஜக முன்னாள் மாவட்ட செயலாளர். பரிமளா அவர்கள் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர், 12வது வார்டு முன்னாள் கவுன்சிலர். தங்கவேல் அவர்கள் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் மற்றும்
குனியமுத்தூர் அதிமுகவைச் சேர்ந்த அசோக் தலைமையில் 25 நபர்கள் உட்பட, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர். செந்தில் பாலாஜி அவர்கள் முன்னிலையில் தங்களை திமுக கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இதில் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மாவட்ட செய்தியாளர் சக்திவேல்


கருத்துகள்
கருத்துரையிடுக