கடலூர் மாவட்ட காவல் நிலையங்களில் நடைபெற்ற பெட்டிஷன் மேளா!
கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் காவல் நிலையங்களில் மனுக்கள் மீது காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என
பிறப்பித்த உத்தரவின்பேரில் கடலூர், சிதம்பரம், நெய்வேலி, பண்ருட்டி, சேத்தியாதோப்பு, விருத்தாசலம், திட்டக்குடி உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் காவல் நிலையங்களிள் நிலுவையில் உள்ள மனுக்களுக்கு தீர்வு காண வேண்டி
நேற்று 19.4.2025 தேதி பெட்டிசன் மேளா கடலூர் மாவட்டம் காவல் நிலையங்களில் நடைபெற்றது. மாவட்டத்தில் 460 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு 135 மனுக்களுக்கு CSR பதிவு செய்யப்பட்டு 325 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்



கருத்துகள்
கருத்துரையிடுக