கடலூர் மாவட்ட செய்தி துளிகள்!
நாள்:- .02.04.2025 (புதன்கிழமை)
👉.தமிழகத்தில் வாட்டி வதைக்கும் வெயிலுக்கு 10 நாள் விடுமுறை. நாளை முதல் 12-ம் தேதி வரை துவங்குகிறது கோடை மழை வானிலை மையம் தகவல்.
👉.ஸ்ரீ முஷ்ணத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாணவி மர்மமான முறையில் இறந்ததை கண்டித்து விண்மீன் பார்வையற்றோர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
👉.கடலூர் அருகே சிங்கிரிகுடி மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் 85 வயது மூதாட்டி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
👉.விருத்தாச்சலம் பூதாமூர் மணிமுக்தாறு பாலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் 4 மூட்டைகளில் மணலை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
👉.திட்டக்குடி அருகே பண்ணை வீட்டில் 500 ரூபாய் கள்ள நோட்டு அடித்த வழக்கில் மேலும் 4 பேர் கைது. முக்கிய குற்றவாளி அயல்நாட்டில் இருப்பதாக தகவல்.
👉.கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் உள்ள 4,462 கொடிக்கம்பங்களை அகற்றாவிட்டால் கட்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தகவல்.
👉.நெல்லிக்குப்பம் அடுத்த மேல் பட்டாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே லாரியை வழிமறித்து ரகளை ஈடுபட்ட சிறுவர் உட்பட 3 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
👉.சென்னையை சேர்ந்த 5 நபர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு காரில் சென்ற போது கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே கார் விபத்துக்குள்ளானதில் 5 நபர்கள் படுகாயம் அடைந்தனர்.
👉.விருத்தாச்சலத்தில் குடிபோதையில் இருசக்கர வாகனத்தை ஒட்டிய நபருக்கு ரூ.10,000 அபராதம் விதித்த போக்குவரத்து போலீசாருடன் குடிமகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
👉.பாதிரிக்குப்பம் திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது.
👉.நெய்வேலி தெர்மல் போலீசார் கடந்த மாதம் 23-ம் தேதி ரோந்து பணியின் பொழுது கஞ்சா விற்பனை செய்த நபரை கைது செய்தனர். அவர்மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
👉.சிதம்பரம் பகுதியில் உள்ள மின்மாற்றி களில் ரூ.4 லட்சம் மதிப்பிலான தாமிர கம்பிகளை திருடிய 2 நபர்களை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடியவர்களுக்கு போலீசார் வலைவீச்சு.
👉.விருத்தாச்சலம் அருகே பெரிய கண்டியாங்குப்பம் கிழக்குத் தெருவில் நண்பர்களுடனான வாய் தகராறில் பீர் பாட்டிலால் தாக்கிய 2 பேர் கைது.
👉.குறிஞ்சிப்பாடி அருகே ஆடுர் அகரம் அம்மன் கோயில் தெருவில் இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது கணவர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு.
👉.விலை ஆதரவு திட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உளுந்து, பச்சைபயிர் நேரடி கொள்முதல் செய்யப்பட உள்ளதாக ஆட்சியர் தகவல்.
👉.விருத்தாச்சலம் அருகே ஆலடி காலனி நடுத்தெருவில் உள்ள கங்கை மாரியம்மன் கோவில் உண்டியலை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
👉.வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி கடலூர் ஜாவன்பவன் அருகில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
👉.கடலூர் அரசு மாதிரி பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.
👉.கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு அதிகாரிகள் உடன் கலந்தாய்வுக் கூட்டத்தில் வாகனங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என காவல் S.P உத்தரவு.
👉.தமிழ்நாடு போக்குவரத்து பணியாளர்கள் ஒன்றிப்பு சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 9-ம் தேதி போக்குவரத்து அலுவலகங்களில் கருப்பு ஆடை அணிந்து பணியாற்ற முடிவு.
👉.திட்டக்குடி அருகே 2 வீடுகளில் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்பில் நகை, பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
👉.கடலூர் புது வண்டிப்பாளையத்தில் பிரசத்தி பெற்ற சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக துவங்கியது.
👉.தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கடலூரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
👉.காடாம்புலியூர் செம்மேடு கெடிலம் ஆற்று பகுதியில் ஆற்று மணலை திருடி மினி லாரியில் ஏற்றிச் சென்ற நபர்களை போலீசார் கைது செய்தனர்.
என்றும் மக்கள் பணியில் நிலவன் தொலைக்காட்சி
கருத்துகள்
கருத்துரையிடுக