கோவையில் நடைபெற்ற திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் சந்திப்பு!
கோவை மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று, கோவை - திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு இடையேயான சந்திப்பு நிகழ்ச்சயில் மின்துறை மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான. செந்தில் பாலாஜி, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்
மு.பெ.சாமிநாதன், மாண்புமிகு மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர். என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர். பவன்குமார் க. கிரியப்பனவர் இ.ஆ.ப., திருப்பூர் மாவட்ட ஆட்சியர், கிறிஸ்துராஜ் இ.ஆ. ப., மற்றும் உயர் அலுவலகர்கள் உடன் இருந்தனர்.
மாவட்ட செய்தியாளர் சக்திவேல்


கருத்துகள்
கருத்துரையிடுக