மேலபுலம் கிராம தொடக்கப்பள்ளியில் குரங்குகள் நடமாட்டம்!
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம் பனப்பாக்கம் அடுத்த மேலபுலம் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குரங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி ஊராட்சி மன்ற தலைவர். அனிதா நாராயணன் அவர்களிடம் பள்ளியின் தலைமை ஆசிரியர். விநாயகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர். மணிமேகலை லிங்கநாதன் ஆகியோர் மனு அளித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்


கருத்துகள்
கருத்துரையிடுக