எம்.சி ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் ரூ.44.50 கோடி மதிப்பீட்டில் புதிய விடுதி கட்டிடத்தை திறந்த வைத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்த எம.சி ராஜா குடும்பத்தினர்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களை, சென்னை மாகாண சட்டமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட முதலாவது உறுப்பினரும் ஆதிதிராவிடர் மகாஜன சபையை சீரமைத்து, அவர்களின் துயரங்களை ஆங்கிலேய அரசிடம் எடுத்துச் சென்ற எம்.சி. இராஜா அவர்களின் குடும்பத்தினர் சந்தித்து, சைதாப்பேட்டை, எம்.சி. இராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் ரூ. 44.50 கோடி மதிப்பீட்டில் பத்து தளங்களுடன் கட்டப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவர்களுக்கான புதிய விடுதிக் கட்டடத்தை நேற்று திறந்து வைத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.


கருத்துகள்
கருத்துரையிடுக