கோவை - கவுண்டம்பாளையம் பகுதியில் நியாய விலை கட்டிடம் மற்றும் புனரமைக்கப்பட்டு நகர்புற மையத்தை ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கி வைத்த அமைச்சர். செந்தில் பாலாஜி!
கோவை மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி, கணபதி, வடக்கு மண்டலம் வார்டு எண் 28 மற்றும் 30ல், நியாய விலை கட்டிடம் மற்றும் புனரமைக்கப்பட்ட நகர்புற மையத்தை ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர். செந்தில் பாலாஜி அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர். பவன்குமார் ஜி. கிரியப்பனவர் இ.ஆ.ப., கோவை மாநகராட்சி மேயர். ரங்கநாயகி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் சக்திவேல்



கருத்துகள்
கருத்துரையிடுக