திருச்சி மார்கெட் பகுதியில் 20,20 ஆகிய திமுக வட்ட கழகங்களின் சார்பில் நடைபெற்ற தெருமுனை கூட்டம்!
மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு திருச்சி (தெ) மாவட்டக் கழகம், திருச்சி (கி) மாநகரம், மார்க்கெட் பகுதிக்குட்பட்ட 20,20அ ஆகிய வட்டக் கழகங்களின் சார்பாக தெருமுனை கூட்டம் நடைபெற்றது. வட்டக் கழகச் செயலாளர்கள். சுருளிராஜன், செந்தில்குமார் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தலைமை கழக பேச்சாளர். குடியாத்தம் பெரிய கோடீஸ்வரன், இளம் பேச்சாளர் செல்வி பாலக்கரை. விஜயலெட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு புகழுரையாற்றினார்கள். இந்நிகழ்சியை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த வட்டக் கழகச் செயலாளர்களுக்கு திமுக கழகம் சார்பில் வாழ்த்துகள், நன்றிகள் தெரிவித்து கொண்டனர்.
கரூர் & திருச்சி மாவட்ட செய்தியாளர் சக்திவேல்



கருத்துகள்
கருத்துரையிடுக