அமைச்சர். செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுக- வில் இணைந்த 2000- த்திற்கும் மேற்பட்ட அதிமுக-வினர்!
கோவை மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்று உணர்ந்து, கோவை வடக்கு மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பன்னீர்மடை அதிமுக துணைத்தலைவர். தாமோதிரன் அவர்கள் மற்றும் அதிமுக ஐடி விங் ஒன்றிய செயலாளர். கவிதா அவர்களின்
தலைமையில், 2000க்கும் மேற்பட்டோர், அதிமுகவில் இருந்து விலகி மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர். செந்தில் பாலாஜி அவர்கள் முன்னிலையில் திமுக கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி, திமுக கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
மாவட்ட செய்தியாளர் சக்திவேல்


கருத்துகள்
கருத்துரையிடுக