கடலூர் குள்ளஞ்சாவடி அருகே பள்ளி ஆண்டு விழாவில் காணாமல் போன 2 1/2 பவுன் தங்க வளையலை கண்டு பிடித்து கொடுத்த காவல் ஆய்வாளர். பிருந்தா!
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி வன்னியர்பாளையத்தில் உள்ள ஆனந்தா மெட்ரிக் மெமோரியல் பள்ளியின் ஆண்டு விழாவில் பங்கேற்க வந்த பள்ளி மாணவியின் தாயார் வைத்திருந்த 2 1/2 பவுன் வளையல் காணாமல் போனதாக பணியில் இருந்த காவலர்களிடம் புகார் கொடுத்ததின்பேரில் காவல் நிலைய எழுத்தர் சிவப்பிரகாசம், மற்றும் தனிபிரிவு முதல் நிலை காவலர்
அருண்குமார் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு ஆண்டு விழாவில் கவரிங் நகைகளோடு கிடந்த தங்க வளையல்களை உடனடியாக கண்டுபிடித்து குள்ளஞ்சாவடி காவல் ஆய்வாளர். பிருந்தா அவர்கள் மூலமாக நகையை தொலைத்த மாணவியின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
நகையை கண்டுபிடித்து கொடுத்த காவலர்களுக்கு பள்ளி நிர்வாகம் சால்வை அணிவித்து கௌரவ படுத்தினார்கள்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக