நெமிலி அருகே காட்டுப் பாக்கம் கிராமத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135-வது பிறந்தநாள் விழா எஸ்.ஜி.சி பெருமாள் பங்கேற்பு!
ராணிப்பேட்டை மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, மாண்புமிகு துணை முதலமைச்சரும், கழக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரும் இராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளருமான ஆர்.காந்தி அவர்களின் வழிக்காட்டுதலின்படி, கழக சுற்றுசூழல் அணி துணை செயலாளர் ஆர்.வினோத் காந்தி அவர்களின் மேற்பார்வையில்
நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் தலைமையில் காட்டுப்பாக்கம், மேலேரி கிராமத்தில் இன்று 14/04/2025 புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135- வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்து அண்ணல் அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் நெமிலி மத்திய ஒன்றிய அவைத்தலைவர். நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர்கள். சீனிவாசன், வெங்கடேசன், சரளா முரளி, நெமிலி மத்திய ஒன்றிய பொருளாளர். செல்வம், மாவட்ட பிரதிநிதி. சம்பத், காட்டுபாக்கம் ஊராட்சி மன்ற தலைவர். தணிகை வேல், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர். கோபாலகிருஷ்ணன், சோளிங்கர்
தொகுதி ஒருங்கிணைப்பாளர் தகவல் தொழில்நுட்ப அணி. காட்டுப் பாக்கம் மனோ, நெமிலி மத்திய ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர். மாரியம்மாள், தீனதயாளன், வழக்கறிஞர் ராஜேஷ், நெமிலி மேற்கு ஒன்றிய சுற்று சூழல் அணி கிளை கழக செயலாளர். சதீஷ், கழக நிர்வாகிகள். ரவி, பிச்சாண்டி, ஆனந்தன், மேலேரி மணிகண்டன், மற்றும் திமுக கழக நிர்வாகிகள் பொதுமக்கள், இளைஞர்கள் இதில் கலந்துக் கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்



கருத்துகள்
கருத்துரையிடுக