இராஜபாளையத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135- வது பிறந்தநாளை முன்னிட்டு தங்கப்பாண்டியன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை!
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தொகுதியில் இன்று (14.04.2025) காலை சட்ட மாமேதை டாக்டர் அண்ணல் BR.அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்த நாளை முன்னிட்டு இராஜபாளையம் நகரிலுள்ள
Dr.BR.அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு பாளையத்து பாண்டியர் S.தங்கப்பாண்டியன் எம்எல்ஏ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி , கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி
கழக நிர்வாகிகளுடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக வெற்றி விழா அணிவகுப்பை MLA அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் வாரியத்துணைத் தலைவர்
ராசாஅருண்மொழி அவர்கள் தனுஷ் M.குமார்.,Ex.MP அவர்கள் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா அவர்கள் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதிராமமூர்த்தி உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.





கருத்துகள்
கருத்துரையிடுக