கோவை மதுக்கரை அருகே மலுமிச்சம்பட்டி ஊராட்சியில் ரூ. 116.90 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி அமைச்சர். செந்தில் பாலாஜி துவக்கி வைப்பு!
கோவை மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், மதுக்கரை வட்டம் மலுமிச்சம்பட்டி ஊராட்சியில் 6 இடங்களில், ரூ.116.90 லட்சம் மதிப்பீட்டில்
தார் சாலை மேம்படுத்தும் பயணிகளை மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர். செந்தில் பாலாஜி அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், மாண்புமிகு பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர். கே.ஈஸ்வரசாமி அவர்கள், கோவை மாவட்ட ஆட்சியர்.
பவன்குமார் ஜி. கிரியப்பனவர் இ.ஆ.ப., கோவை மாநகராட்சி மேயர் திருமதி ரங்கநாயகி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் சக்திவேல்



கருத்துகள்
கருத்துரையிடுக