கண்காணிப்பு கேமராக்கள் காட்சிகளை ஆய்வு செய்து தொலைந்து போன 1 1/2 பவுன் செயின் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளர். சந்திரன்!
கடலூர் மாவட்டம் தில்ஷாத்பி க/பெ யூசுப், பகவந்தர்சாமி மடம், புதுப்பாளையம் என்பவர் இன்று 15.4.25 தேதி மதியம் சுமார் 1 மணிக்கு தனது கழுத்தில் அணிந்திருந்த 11/2 பவுன் செயின் தொலைந்துவிட்டதாகவும் கண்டுபிடித்து கொடுக்குமாறு திருப்பாதிரிபுலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திருப்பாதிரிப்புலியூர் காவல் ஆய்வாளர் அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் கதிரவன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் உடனடியாக கண்காணிப்பு கேமராக்கள் காட்சிகளை ஆய்வு செய்து தொலைந்து போன1 1/2 பவுன் செயினை கண்டுபிடித்து காவல் ஆய்வாளர். சந்திரன் அவர்கள் தில்ஷாத்பி அவர்களிடம் ஒப்படைத்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக