தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் 2025- 2026 ஆண்டிற்கான பட்ஜெட்டில் குறைந்தபட்ச சிறப்பு பென்ஷன் தொகை ரூபாய் 6750 அகவிலைப்படியில் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் ஜெகதீசன், மற்றும் மாநில பொறுப்பாளர்கள் சுசீலா , மலர் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர் மாவட்ட பொருளாளர் மோகனா நன்றி கூறினார் இவ்வாற்பாட்டத்தில் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் என 70 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் ஆனந்த்

கருத்துகள்
கருத்துரையிடுக