கரூரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பாக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா அமைச்சர். செந்தில் பாலாஜி பங்கேற்பு!
கரூர் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பாக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா
மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான. செந்தில் பாலாஜி அவர்கள் தலைமையில் கரூர் அட்லஸ் கலையரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆசிகளுடன், 300 கர்ப்பிணி
பெண்களுக்கு வளைகாப்பு சீரும், 98 மகளிர்களுக்கு தாலிக்கு தங்கமும் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் வழங்கி விழாவினை சிறப்பித்தார். இதில் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்





கருத்துகள்
கருத்துரையிடுக