நிலவன் தினசரி செய்தி நாளிதழில் இருந்து..

 நாள்:- 19.03.2025 (புதன்கிழமை)

👉.மே மாதம் 1-ம் தேதி முதல் சிதம்பரம் இரயில் நிலையத்திலிருந்து 5 மினி பேருந்துகள் உரிமம் பெற்று மே 1-ம் தேதி முதல் மினி பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல்.

👉.பண்ருட்டி அடுத்த நெல்லடிக்குப்பம் வடக்கு தெருவில் வீட்டுக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபரை கத்தியால் தலையில் வெட்டிய 4 பேர் கைது செய்தனர்.

👉.சிதம்பரம் அடுத்த வல்லம்படுகையில் சாப்ட்வேர் என்ஜினியர் வீட்டில் 17½  லட்சம் மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

👉.மதுரையில் நடக்கும் 24-வது அகில இந்திய மாநாட்டை முன்னிட்டு கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணி நடத்தினர்.

👉.நெய்வேலி தெர்மல் போலீசார் ரோந்து பணியின் போது கஞ்சா விற்பனை செய்த 3 நபர்களை பிடித்து குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

👉.பரங்கிப்பேட்டை அருகே சுங்கச்சாவடி கண்காணிப்பு கேமராவை உடைத்து ஊழியரை தாக்கிய 6 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

👉.புவனகிரி அடுத்த பி.முட்லூர் பகுதியில் இறால் பண்ணையை அகற்ற வந்த அதிகாரிகளை அதன் உரிமையாளர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

👉.சிதம்பரம் அண்ணாமலைநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 7 நாய்கள். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

👉.கடலூரில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலன்களை பாதுகாக்க வேண்டும் என பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

👉.பண்ருட்டி பெண்ணாடம் பகுதியில் ஆற்று மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

👉.கடலூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது சரியாக சிகிச்சை அளிக்காத மருத்துவர்களின் அலட்சியப் போக்கால் உயிரிழந்த பச்சிளம் குழந்தை.

👉.17 வழித்தடங்கள் மினி பேருந்து ஓட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது.மேலும் 44 வழித்தடங்களில் பேருந்து இயக்க 151 பேர் போட்டி போடுவதால் குழுக்கள் முறையில் தேர்வு. 

👉.பெண்ணாடம் திருமலை அகரம் கிராமத்தில் முன் விரோதம் காரணமாக கத்தியால் காதையை வெட்டி நபரை போலீசார் கைது செய்தனர்.

👉. பண்ருட்டி அருகே உள்ள பண்டரக்கோட்டையில் செல்போனில் நிர்வாண படம் எடுத்து மிரட்டி பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் நிறுவனம் மேலாளர் கைது. 

👉.விருத்தாச்சலம் திரு.வி.க நகர் திருவள்ளுவர் தெருவில் சேர்ந்த பா.ம.க மாவட்ட செயலாளரின் மீது முகநூலில் அவதூறாக பதிவு செய்து 5 நபரை போலீசார் கைது செய்தனர்.

என்றும் மக்கள் பணியில் நிலவன் தொலைக்காட்சி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!