கடலூர் மாவட்டத்தில் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை உடனடி தீர்வு காண வேண்டி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் அறிவுறுத்தல்!
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் IPS அவர்கள் காவல் நிலையங்கள் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு நிலுவையில் உள்ள மனுக்கள் மீது காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பிறப்பித்த உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்
கோடீஸ்வரன், நல்லதுரை ஆகியோர்களின் மேற்பார்வையில் கடலூர், சிதம்பரம், நெய்வேலி, பண்ருட்டி, சேத்தியாதோப்பு, விருத்தாசலம், திட்டக்குடி உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் காவல் நிலையங்களிள் நிலுவையில் உள்ள மனுக்களுக்கு தீர்வு காண வேண்டி இன்று 1.3.2025 தேதி பெட்டிசன் மேளா நடைபெற்றது. மாவட்டத்தில் 459 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு தீர்வு காணப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக